நோபல் பரிசு பெற்றவர் பதினால் வரைக் கொண்டு வளமிக்கதாய்த் திகழ்வது பிரஞ்சு இலக்கியம். இதில் கவிதைக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. அவ்விலக்கியத்திலிருந்து தொடக்ககாலம் தொட்டுத் தற்காம்வரை. அழியாப்புகழ் பெற்ற 25 கவிஞர்களின் (இவருள் கவிதாயினிகள் இருவர் அடக்கம்) பிரபலமான 50 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து. அவற்றின் ஃபிரஞ்சுமொழி மூலமும், தமிழாக்கமும் எதிர்எதிரே காணும்படி தொகுத்து இச்சிறு பனுவலில் வழங்கப்பட்டுள்ளன. கவிதைகள் கவிஞர் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி. என்றென்றும் நிலைத்துநிற்கும் மானுடப் பண்புகளைப் பிரதிபலிப்பனவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவை காதல், சோகம், கடமையுணர்வு, நாட்டுப்பற்று, சுதந்திரதாகம், தெய்வசிந்தனை, குழந்தைக்கவிதை, வரலாற்று நாடகக் கவிதை. வருணனை, கிண்டல், குறியீட்டுக்கவிதை சித்திரக் கவிதை எனப்பல்வேறு பரிமாணங்களில் விரிந்து, நவரசங்களைப் பிலிற்றுவன்.