தஞ்சையின் இன்றையப் புகழ்பெற்ற படைப்பாளர்களில் ஒருவரான சோலை சுந்தரபெருமாள் தஞ்சை மண்ணி இலக்கியச் செல்வர்கள்-முக்கியமாக சிறுகதை பிரம்மாக்கள் பற்றி பெருமை கொண்டு, அவர்களைப் பற்றிய தகுந்த அறிமுக உரையோடு அவர்களது விசேஷமான சிறுகதை ஒன்றையும் தொகுத்து வழங்க முற்பட்டது இயல்பாக அவருக்குள்ள மண்ணின் பற்றுதலையும் பெருமையையும் புலப்படுத்துகிறது.