சிதறி சிதறிக் கிடக்கிறது வாழ்க்கை. நேற்றின் மழைநீரில் அலசலாக ஊஞ்சலாடும் பிம்பம்போல முகம் காட்டுகிறது தினமும். ஒவ்வொரு நாளும் புதுநாளாய் விடிகிறது. என்றாலும் எல்லோருக்கும் அல்ல. சிதிலமடைந்த மனங்களோடு எத்தனை பேர், எத்தனை காலைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் நாம் சந்தோஷமாயிருப்பது போல முகங்களை அணிகிறோம். பல தருணங்களில்.