மனிதன் தன்னுடைய பிரக்ஞையில் உலகின் மிக உயர்ந்த இடத்தைஅடைகிறான். நீங்கள் ஆழ்ந்த தியான நிலையில் இருக்கும்போது, பேரானந்தத்தில் திளைக்கும்போது, பிரார்த்தனை செய்கிறபோது பரவசத்தில் ஆழ்கிறபோது உங்கள் கண்கள் உலகைப் பார்ப்பதில்லை சரீரம் அங்கே இருப்பதில்லை உங்களுக்குள் ஆன்மா என்கிற மரம் இருப்பதை, அது மேலும் மேலும் உயர்ந்தெழுவதை நீங்கள் உணர்வீர்கள் உங்களால் பறக்க முடியும் என்பதை நீங்கள் எதிர்பாராத கணத்தில் உணர்வீர்கள்.