இந்த நாவலைப் படித்துவிட்டு, சிலிர்ப்படைந்த பல தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அரவிந்தர் என்றும், பெண் குழந்தையாய் இருந்தால், பூரணி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தது உண்டு. அந்த அளவுக்கு நாவலின் கதாநாயகன் அரவிந்தனையும், கதாநாயகி பூரணியையும் சிறப்பாகச் சித்தரித்திருந்தார் ஆசிரியர். இது ஒரு உரை நடைக் காப்பியம். ஒவ்வொரு தமிழனும் ரசிக்க வேண்டிய உன்னத உயிர் ஓவியம். -எஸ். குரு, நன்றி: தினமலர், 18/8/2013.