ஜே. கே. அவர்களின் தத்துவம் சற்று கடினமானது ஆனால் சத்தானது என்பார்கள். திரு. மானோஸ் அவர்கள் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் அகமலர்ச்சி என்ற இந்நூலில் ஜே.கே.யின் சுயசரிதத்தின் சுருக்கத்தையும், தேசத் தலைவர்களுடன் கொண்ட தொடர்பினையும் விவரிப்பதோடு. ஜே.கே. யின் சந்திப்பில் நிகழ்ந்த தத்துவார்த்த உரையாடலை மிக அழகாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார். அகமலர்ச்சிக்கான வழித்தடத்தைக்காண விழைவோருக்கு, இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை.