உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு முதல் முறையாகத் தமிழில் வெளியாகிறது., முழுக்க முழுக்கப் புதிர்களால் நிரம்பியது என்றால் நம்ப முடிகிறதா. கிரேக்க இலக்கியத்துக்கு ஹோமர் எப்படியோ அப்படித்தான் ஆங்கில இலக்கியத்துக்கு ஷேக்ஸ்பியர். ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் கவிதைகளும் மொழி, இனம், தேசம், போன்ற எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் காற்றுப்போல் கலந்து பரவியிருக்கின்றன. ஆகவே தான், இலக்கியம் கற்க விரும்பும் ஒவ்வொரு வரும் ஷேக்ஸ்பியரிடம் இருந்து தொடங்குகிறார்கள். ஆயிரம் சர்ச்சைகள், எண்ணற்ற சந்தேகங்கள், ஷேக்ஸ்பியர் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். காலத்தை வென்று நிற்கும் அதிசய வாழ்க்கைக் கதை.