எண்பதுகளில் தோன்றிய முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவரான வாசகர்கள் பொருட்படுத்து விவாதிக்கத்தக்க பல படைப்புகளைத் தமிழுக்குத் தந்தவர். இவரது அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும், நாயகன், நவீன சிறுகதை கள் போன்ற தொகுதிகள், அவை வெளிவந்த காலத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவை. வேடந்தாங்கள் , பாப்கார்ன் கனவுகள் இரண்டும் சிவகுமார் பேர் சொல்லும் நாவல்கள்.சிவக்குமாரின் கதைகள் அனைத்துமே மத்தியதர வர்க்கத்தின் மனச்சாட்சியாக இருப்பவை. மிகையான ஜோடனைகளோ, உத்திகள் சார்ந்த மயக்கமோ அறவே கிடையாது. எளிய, நகைச்சுவை கொப்பளிக்கிற மொழி அவருடையது. பாசாங்கில்லாத வெளிப்பாட்டால் சிறப்பிடம் பெறுபவை.சிவக்குமாரின் இத்தொகுதியில் அவரது சமீபத்திய 19 புதிய சிறுகதைகள் இடம் பெறுகின்றன. தொழில்ரீதியில் தொலைக்காட்சித்தொடர் எழுத்தாளராக அவர் இருந்தாலும் சிறுகதைக்கான இறுக்கமும் கட்டுக்கோப்பும் சிவக்குமாரின் எந்த ரு படைப்பிலும் இல்லாது போவதில்லை.
-ம.வே.சிவக்குமார்.