எங்கோயோ ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது. எதற்காகவோ ஒரு பெண்
விம்மிக் கொண்டிருக்கிறாள், யாரோ ஒருவனைத் தேடி காவலர்கள் துப்பாக்கிகளோடு
காத்திருக்கிறார்கள். ஒரு பைத்தியக்காரன் தீவிரமாக 'எதையோ யோசித்துக்
கொண்டிருக்கிறான்,
பச்சைக் கிளிகளைத் தொலைத்துவிட்ட ஆதிக் காடு களின் அம்மா ஞாபகத்தையும்
வெள்ளைப் புறாக்களை / விற்றுவிட்ட அமைதியின் கையறு நிலையையும்
வெளிக்காட்டிக் கொள்ளாமலேயே நகர்கிறது காலம்,
'நான் இந்தக் காலத்தின் பிரதிநிதி. எனது நாள்களின் சில குறிப்புகளே இந்தப் பக்கங்கள்.