அரசியல் கல்வி, மருத்துவம், ஆன்மிகம், பொதுஅறிவு, மனிதநேயம், பகுத்தறிவு என பலதரப்பட்ட விஷயங்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார் இந்நூலாசிரியர் சபீதா ஜோசப். உதாரணமாக... அந்த அறிஞர் அன்று முதன் முதலாக அந்த தெரு வழியே சென்று கொண்டிருந்தார். வழியெங்கும் வறுமையில் வாடும் மக்களே அதிகம் தென்பட்டனர். ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியின்றி தவிக்கும் அந்த ஏழைகளின் துயரத்தைக் கண்டு கண்கலங்கினார், அந்த அறிஞர்.