பெ. நாயகியின் இந்த நூல் '' தீர்வுகள் நமக்குள்ளே...'' வாழ்க்கைக்கு மிக அவசியமான பல சிந்தனைகளை, சுவைபட எடுத்தியம்புகிறது. ஆசிரியர் சிறுகதைகள் எழுதுவதில் முத்திரை பதித்தவர். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்தல் என்பது எத்தனை அவசியம் என்பதையும், பிள்ளைகளைக் கண்டிப்போடு வளர்க்கத் தவறிவிட்டால் பிற்காலத்தில் பாதிப்படையப் போவது அந்தப் பிள்ளைகள் தாம் என்பதையும், ஆரோக்கியத்தை எப்படி அக்கறையோடு பேணிப் பாதுகாப்பது என்பதையும் - இதுபோன்ற பல பிரச்சினைகளை மூன்றாம் மனிதரின் தூண்டுதல் இல்லாமல் நமக்குள் நாமே பதறாமல் அமர்ந்து சிந்தித்தால். சுலபமாகத் தீர்வு கண்டுவிட முடியும்.