உலகத்தை, ஒரு சமூகத்தை, நாகரிகத்தை, மக்களை, இனத்தை உருவாக்குவது அறிஞர்களின் ஒப்பற்ற சிந்தனைகள்தாம். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் செயல்பாட்டிலும் அவனைச் செம்மைப்படுத்தி ஆற்றல் வாய்ந்த மனிதனாக்குவது அறிவாளிகளின் போதனைகள் தாம் அதாவது சிந்தனைகள். நம் வாழ்க்கை, ஆங்கில நாகரிகத்தினால் அலங்காரம் செய்யப்பட்ட ஒன்று. நம்மை ஆங்கிலேயர் அடிமையாக்கிப் பல காலம் ஆண்டாலும், பல நல்ல விஷயங்களையும் அவர்கள் நமக்குப் போதித்துள்ளதை நாம் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.