ங்கள் மகனுடன் குலதெய்வம் கோவிலுக்குப் போய் விட்டு, பின் நாங்கள்
கன்னியாகுமரிக்கு டாக்ஸியில். பயணம் புறப்பட்டோம். என் மகன் பாபநாசம் நீர்வீழ்ச்சி, மணிமுத்தாறு அணை எல்லாம் போக ஆசைப்பட்டான். ஆனால் டாக்ஸி டிரைவர் அங்கு தண்ணீர் இல்லை , டேம் திறக்கவில்லை என்றார். அதனால் நேரே கன்னியாகுமரிக்குப் போனோம்.
நான் சிறு வயதில் நாகர் கோவிலில் இருந்த போது உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கன்னியாகுமரிக்கு அடிக்கடி போவோம். அப்போது காந்தி மியூஸியம் மட்டும் தான் உண்டு. விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை கட்டிய பிறகு போகவே இல்லை. இப்போது தான் நேரம் வாய்த்தது.