இந்து தொன்மவியலின் படி மனு என்பது ஒரு பதவியாகும். பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சி காலம் மனுவந்தரம் எனப்படுகிறது.
தற்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், சாக்சூசம், வைவசுவதம், சாவர்ணி, தக்ச சாவர்ணி, பிரம்ம சாவர்ணி, தர்ம சாவர்ணி, ருத்திர சாவர்ணி, ரௌசிய தேவ சாவர்ணி, இந்திர சாவர்ணி ஆகிய பதினான்கு மனுக்கள் உள்ளார்கள்.
மனு எனும் வேர்ச்சொல்லிருந்து மனுஷ்யன், மனிதன் சொற்கள் தோன்றியது.