கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி யாருக்காக உழைக்கின்றது என்ற கேள்வி மிக தீவிரமாக கேட்கப்பட்டு வருகிறது.
அசம்கர் பகுதியில் ஜூலை 15ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
அப்போது ”காங்கிரஸ் கட்சி இஸ்லாமிய ஆண்களுக்கு மட்டும் தான் உதவுமா, அக்கட்சியில் பெண்களுக்கான இடம் இருக்கிறதா இல்லையா?” என்ற கேள்வியினை எழுப்பியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக உருது பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “காங்கிரஸ் கட்சியினர் எப்போதுமே இஸ்லாமிய கட்சியினர் தான். அதனால் தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த நாட்டின் வளங்கள் மீது இஸ்லாமியர்களுக்குத் தான் முதலுரிமை என்று கூறினார்” என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார்.