சிறுவர், சிறுமியர்களை மையப் பாத்திரங்களாக புனைந்து நல்ல சமுதாயக் கருத்துகளை 15 கதைகளில், படத்துடன் அமைத்து தயாரிக்கப்பட்டுள்ள நூல் ' உயிர் காத்த நட்பு' இன்றைய இளம் தளிர்கள் வருங்கால வரலாற்றின் கருவூலங்கள்! என்பதற்கிணங்க, அவர்களது மனதில் பசுமையான நிகழ்ச்சிகளை 'பசுமரத்தாணி போல' புதிய வைக்கும் நோக்கில், சிறந்த விஷயங்களை எளிமையான நடையில் படைத்துள்ள கதாசிரியர் சங்கர் நாராயணன் அவர்களின் படைப்பாற்றல் பராட்டுதலுக்குரியது.