காமராஜர் (Kamaraj) 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் விருதுநகரில் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மயார் தம்பதியினருக்கு பிறந்தார். முதலில் அவருக்கு காமாட்சி என பெயர் சூட்டப்பட்டு பின்னர் காமராஜர் என மாற்றப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர், காங்கிரஸ் தலைவர் என காமராஜருக்கு பல முகங்கள் உண்டு. 1960களில் இந்திய அரசியலின் கிங்மேக்கர் என அழைக்கப்பட்ட காமராஜர், தமிழகத்தில் பெருந்தலைவர் என போற்றப்படுகிறார்.