கடின உழைப்பு அனைவருக்கும் சிறப்பையே தரும். நாம் வாழுகின்ற சூழலை உற்று நோக்கினால் ஒவ்வொரு உயிரினத்திடம் இருந்தும் கடின உழைப்பை கற்றுக் கொள்ளலாம்.
தேனீக்களும் சிலந்திகளும் கடின உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணமாக கொள்ளப்படுகின்றன.
சிலந்தியின் வலை எத்தனை முறை கலைக்கப்பட்டாலும் மீண்டும் தனது வலையை பின்னி வாழும் திறமை கொண்டது.தேனீக்கள் சிறியளவு தேனை சேகரிக்க 16 மைல் தூரம் வரை பயணம் செய்து கடினமாக உழைக்கின்றன.உழைப்பு எனப்படுவது ஒவ்வொருவரிற்கும் அளிக்கப்பட்ட வேலையை முழுமுயற்சியுடன் செய்தல் ஆகும்.உழைப்பில்லாமல் உயர்வு இல்லை. ஒருவர் எந்தளவிற்கு கடினமாக உழைக்கின்றாரோ அந்தளவிற்கு உயர்ந்த நிலையை அடைய முடியும்.
வேலை செய்பவர்கள் அவர்களது வேலையை முழுமுயற்சியுடன் செய்தால் மட்டுமே உயர்ந்த இடத்தை பெற முடியும். மாணவர்கள் கடினமாக படித்தால் மட்டுமே பரீட்சையில் சித்தி அடைய முடியும்.