ஒரு
கருத்தை முதுகைச் சுற்றி மூக்கைக் தொடும் கவிஞர்கள் நிறைந்த தமிழ்க்
கவிதையின் நவீனச் சூழலில், அதே கருத்தை பல்லாயிரமாண்டு கலாசார வாசணையுடன்
நவீனம் குறையாமல் வெளிப்படும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொள்ள நாமும் ஒரு
கவிஞராக இருக்க வேண்டும் என்பதில்லை.படைப்பாற்றல்
அல்லது படைப்பு என்பது மொழியைத் தன்வயப்படுத்தி, அவ்வப்போது வாயிலிருந்து
லிங்கம் வரவழைக்கும் வேலையல்ல! வரலாற்றின் கவிதைத் தொடர்ச்சியில் நாமும்
ஒரு கைபிடித்து வடம் இழுக்கும் பொறுப்பு என்று உணர்ந்துகொள்வது.அம்மாச்சி தொகுப்பிலுள்ள கவிதை அதைத்தான் செய்கிறது. நாமும் அப்படித்தான் புரிந்துகொள்கிறோம்.