
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Vallalaar Kaatum Vaalviyal
Free shipping over ₹500
உலக வரலாறு பல பேரழிவுகளைக் கண்டது. போர்களால் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படவில்லை. மேலும் மேலும் பிரச்சினைகளே எழுந்தன. அறிவியல் பல அழிவுகளையும் உள்ளடக்கியே உள்ளது. வள்ளலாரின் வாழ்வு நெறி உலக மக்களால் கடைப்பிடிக்கப்படாமல் புதிய வரலாறு படைக்கலாம். புதிய அறிவியல் உலகத்தைத் தோற்றுவிக்கலாம். அந்த உலகில் பகை இல்லாத ஞான அமைதியை நிலவச் செய்யலாம்.
''வள்ளலார் காட்டும் வாழ்வியல்'' என்ற இந்நூல் திருப்பால. வள்ளலார்தாசன் (சி. கோவிந்தராசன்) அவர்களால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் வள்ளலாரின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம் போன்ற வரலாற்றுத் துளிகளும் வள்ளலாரின் பாடல்களில் ஆழத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். மூச்சுத்திணறாத வண்ணம் நம்மைக் கருத்துக்களஞ்சியங்களோடு கரையேற்றி வைக்கிறார்.
வள்ளுவன், கம்பன் பிறந்தால் மட்டும் தமிழ்நாட்டுக்குப் பெருமை இல்லை, '' வள்ளலார் பிறந்த தமிழ் நாடே'' என்று சொல்லியும் பெருமை கொள்ளலாம் என்று பாடிக்காட்டுகிறார்.
வள்ளலாரின் தந்தை ஐந்து மனைவிகளை மணந்து, குந்தை இல்லாமல் அவர்களை இழந்து, ஆறாவது மணந்த மனைவி மூலமாக பெறுதற்கரிய அருட்பெருஞ்ஜோதியை உலக்குத் தந்துள்ளார்.