முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் யீ லீ என்ற மனிதன் தன் தாயாருடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் தாமரைக் குளம் என்ற இடத்தில், தியன் தாய் என்ற மலைக்கு பக்கத்தில் வாழ்ந்து வந்தார்கள்.தாயார் மிகவும் வயதானவர்.அவரால் வேலை எதுவும் செய்ய முடியாமல் போனது. அப்போது யீ லீ மேலும் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அரிசியும்,காய்கறிகளையும் பயிர் செய்தான்.