முற்றிலும் அகவற்பாவால் இயற்றப் பெற்ற இந்நூல், இனிய எளிய தெளிந்த தமிழில் அனைவரும் படித்தறியும் வகையில், சிறந்து விளங்குகிறது. இதன் முதற்பகுதி, தந்தையார் அவர்கள் சிறைக்கோட்டத்தில் இருக்கும்போது எழுதியதாகும். நூலின் பிற்பகுதி, தந்தையார் சிறையினின்றும் வெளியே வந்தபின் அவர்களது வாழ்க்கையின் சுருக்கம் ஒன்றை எழுதினார்.