மனித
வாழ்க்கையின் இறுதி இலக்கு ஆன்ம விடுதலைதான். கர்மங்களின் வினைகளின்
பிடியிலிருந்து வன்மா விடுபடுவதே மோட்சம். ஒவ்வொருவரின் சுயமுயற்சியால்
மட்டுமே அது சாத்தியமாகும். மனம், மெய், மொழி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தித்
தவநெறிகளைக் கடைப்பிடித்து மேலும் கர்மம் சேராமல் தடுக்க வேண்டும். ஆன்ம
விடுதலை ஒரு குறையற்ற நிலையும், என்றும் உளதான வாழிடத்தில் எல்லையில்லா
இன்பம் தரும் நிலையும் ஆகும். அவ்விடத்தில் பிணி (நோய்), மூப்பு (வயது
தளர்தல்), சாக்காடு (இறப்பு), பிறவிச்சுழல் ஆகிய துன்பக் காரணிகள்
கிடையாது.