ராமாயண காவியத்தைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாத ஆனால் அதன் மீது காழ்ப்பு கொண்டு வெட்டியாக அவதூறு பேச விழைபவர்கள் உரத்த குரலில் கூச்சலிடக் கையாளும் ஒரு சொற்றொடர் ***முன்னூறு ராமாயணங்களும். ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அப்படி ஏ.கே. ராமானுஜம் என்ன தான் எழுதி விட்டார் என்பதனையே அறிய விழையாது விடலைகளின் கூச்சல்களிலேயே கலவரமாகி ஏ.கே ராமானுஜம் என்ற வ்யக்தி விசேஷத்தையே சந்தேஹாஸ்பதமாக புறந்தள்ள விழையும் இன்னொரு கும்பல். அப்படியானால் அது என்ன முன்னூறு ராமாயணம் என்ற வினா எழும். ராமாயணம் என்ற பெயரில் சகட்டுமேனிக்குக் கண்ட கண்ட குப்பைகூளங்களையும் ராமாயண சாகரத்தில் அள்ளி வீச விழையும் இழி செயலை சரியான முறையில் அடையாளம் காணுவதற்கு இந்த விவகாரத்தைப் பற்றிய ஒரு முழுமையான புரிதல் வழிவகுக்கும் என்பதால் வ்யாசத் தொடரின் இந்த பாகம் எழுதப்படுகிறது.