மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி, மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு புத்தகம் 27 அத்தியாங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீரோடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்த்து ஆதி கைலாசம்; அபாயங்கள் நிறைந்த பகுதி. டில்லியிலிருந்து, 600 கி.மீ., தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை. தற்போது பிரபலமாக, அனைவராலும் மேற்கொள்ளப்படும் கைலாசயாத்திரையை விட, ஆதி கைலாச யாத்திரை அபாயகரமானது. புதுடில்லியிலிருந்து புறப்பட்டு, ஆதி கைலாசத்தில் உள்ள பார்வதி ஏரி வரை பயணித்த தன் பயண அனுபவங்களை, ஒரு நாவல் போல், மிக அழகாக, துள்ளுதமிழ் நடையில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.