பாலையாய் வறண்டு போயிருக்கும் இரு நெஞ்சங்களின் கதை தான் இது!
என்னதான்
நாகரீகம் வளர்ந்து, பல முன்னேற்றங்களை மக்கள் சந்தித்திருந்தாலும்
‘மறுமணம்’ என்ற ஒன்றை எல்லோராலும் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
அதிலும் இரு சிறு குழந்தைகளின் தாய் இரண்டாவது திருமணத்தைப் பற்றிச் சிந்திக்கவே தயக்கம் காட்டுவதும் உண்டு.
சொந்தங்களின்
ஆதரவு இல்லாமல், இரு சிறு குழந்தைகளுடன் தனி மனுஷியாய் போராடும் இளம்
விதவையின் பாலைவன வாழ்க்கையில் பனித்துளியாய் நுழைகிறான் நாயகன். அவனை
அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்ததா?
கதையிலிருந்து...
கையசைத்த
ஹரிணியைக் கை நீட்டி அழைத்தான். ஹரிணியும் உற்சாகமாக அவனிடம் ஓடி வந்து
அவன் காலை கட்டிக் கொண்டு, “அங்கிள்…” என்று ஆசையாக அழைத்தாள்.
அவளின் தலையில் கைவைத்து வருடிவிட்டவன், “இங்கே என்ன பண்ற பாப்… ம்ம் ஹரிணி?” என்று கேட்டான்.