வரலாறே வேண்டாமென்று வாழ்ந்து விட்டுப் போக நீ என்ன மண்புழுவா? மனிதனல்லவே!... சரித்திரமே வேண்டாமென்று சாம்பலாகிப் போவதற்கு நீயென்ன சவுக்கு மரமா? சாய்ந்த பிறகும் மணம் கமழுகிற சந்தன மரமல்லவா!... நீ இந்தப் பிரபஞ்சத்தைப் போல பிரம்மாண்டமானவன்! பிரமிடுகளைப் போல பிரமிப்பானவன்! தொங்கும் அருவியைத் தொற்றிக் கொண்டாவது மலையேறி விட வேண்டும். மனதில் நிறுக்க!