இப்புனித புத்தகத்தை படிப்பது ஸ்ரீ சுந்தர காண்டம் பாராயண பலன் கிடைக்கும் என்பது வேத விற்பன்னர்களின் அருள்வாக்கு. சுசீந்தரம், சோளிங்கர், நாமக்கல், நங்கை நல்லூர், நல்லாட்டூர், பண்ருட்டி, பஞ்சவடி க்ஷேத்திரங்களில் அருளாசி புரியும் மூர்த்திகளின் சக்திகளும் விசேஷ படங்களுடன் பரிமளிக்கிறது. சூரியனிடத்தில் வேதம் பயின்றது, பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திராதி தேவர்களிடமிருந்து பெற்ற விசேஷ வரங்கள், அனுமனும் நாரதர், அர்ஜுனன், பீமன், விபீஷணன், கிருஷ்ணபரமாத்மா, இராவணனை சந்தித்தல், சனி பகவானை அடக்குதல், தூதுவனுக்கு ஏற்ற சாணக்கிய விசேஷ குணங்கள், "கண்டேன் சீதையை" என்று உரைத்த சொல்லின் செல்வன் கோவர்தன கிரியை காணுதல், சஞ்சீவி மலையை தூக்கி, பறந்து வந்த அபூர்வ செயல், துளசி மாதாவின் மகிமைகள் அனைத்தையும் படித்து பயன் பெறலாம்.