திருமந்திரத் திருத்தலங்கள் என்னும் இந்நூலில் முபபத்திரண்டு தலங்களைப் பற்றிய செய்திகள் விளக்கம் பெறுகின்றன. கயிலையிலிருந்து சிவயோகியாராகத் தென்திசை புறப்பட்டு வந்தபோது வழிபட்ட தலங்கள் ஒன்பது. திருமந்திர நூலில் பெயர் சுட்டிக் கூறப்படும் தலங்கள் ஏழு. பெயர் சுட்டப்படாமல் தலத்தோடு தொடர்புடைய செய்திகளால் உணர்த்தப்படும் தலங்கள் பதினாறு. இத்தலங்கள் அனைத்தும் பற்றிய தலச் சிறப்பு, புராணச் செய்திகள், பாடிய அருளாளர்கள் எனப் பல செய்திகளும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.