பல்கலைக் கழகமாய், ஞானத்திருவுருவாய், கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சிப் பெரியவர் அவர்கள் பல்வேறு சமயங்களில் அருளியிருக்கும் நன்னெறிகளில் யான் அறிந்து, உணர்ந்த சிலவற்றைத் தொகுத்து இச்சிறு நூலில் வழஙகி இருக்கின்றேன். வாழ்க்கையை வளமானதாக, சிறப்பானதாக, பொருள் நிறைந்ததாக, பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கு இச்சிறு நூல் ஒரு தூண்டுகோலாக, வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகின்றேன். அன்னை காமாட்சியின் அருளாசியோடு நடமாடும் தெய்வமான காஞ்சிப் பெரியவரையும், எல்லாம் வல்ல எம்பெருமானையும் வணங்கி போற்றி இந்நூலை உங்கள் முன்பு படைக்கின்றேன்.