இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழக கவிஞரான பாரதியாரோ, உனலைக்கட்டு' உயிரைக் கட்டலாம்' என்றான். நமது உள்ளத்தைக் கட்ட மூளையில் எப்போதும் ஒரே ஒரு பொருள் சுரந்தால் போதும். அந்தப் பொருள் என்ன? அநற்கு என்ன செய்யவேண்டும் இது போன்ற கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் உண்டு. பொது அறிவை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் முன்னேறிவிட முடியுமா ? நிச்சயம் முடியும். இரண்டு கால்களையும் மலையேற்றத்தின் போதே இழந்த நியூசிலாந்து நாட்டு மலையேறும் வீரரான மார்க் இல்லீஸ் கடந்த 14-5-2006 அன்று 8850 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தே விட்டார். இவருடைய தன்னம்பிக்கைக்கு உதவியது இவருடைய பொது அறிவுதான். முழங்கால்களுக்கு கீழ் கால்கள் இல்லை இவருக்கு. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை படைக்க பயிற்சி செய்தார். உடனே அறிவைத்தான் பயன்படுத்தினார். அறிவு உள்ளரே எல்லாம் உடையவர் என்பது அறிவை வள்ளுவனின் வாக்கு. எனவே பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும், வானொலி, டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கு பெறவும் இந்த நூலில் உள்ள பதில்கள் உதவும் என்பது உறுதி.
- பதிப்பகத்தார்.