"வட்டத்தை மீறிய விரிவுகள்" என்னும் இச்சிறுகதை தொகுப்பு நூலின் படைப்பாளர் ஏ.எம். சாலன் அவர்கள் தலித் மக்களின் குடிதாழ்ந்த வாழ்க்கையைக் கொடி உயர்த்திக் காட்டுகிறார். இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை நேரில் கண்டுணர முடியாதவர்கள் இதைப் போன்ற நூல்கள் மூலம் படித்துணர்வதால் தங்கள் சொகுசுத் தனத்தைக் குறைத்துக் கொண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்குக் கொசுறு போலாவது சிறு உதவிகளைச் செய்ய உந்துதல் பெற வேண்டும். அது நாட்டுக்கு நன்மை பயப்பதாகும்.