சிரிப்போம், சிந்திப்போம்;இன்று திரைப்படம், தொலைக்காட்சி, உரையாடல் எல்லாவற்றிலும் மக்கள் நகைச்சுவயையே
பெரிதும் விரும்புகிறார்கள். சோக்க் காட்சிகளைப் பார்த்து அழுது வழிவதற்கு யாரும் தயாராகஇல்லை. செயற்கைக் தனமான 'டுசிம் டுசிம்' குத்துச் சண்டைகளைப்பார்த்து ரசிப்பார்கள். ஆனால் துன்பியல் காட்சிகளைப் பார்த்துச் சகித்துக் கொள்ளமாட்டார்கள். உல்லாசக் காட்சிகளைப்பார்த்து ரசிக்கவே பெரிதும் விருப்பம் கொள்கிறார்கள். அதனால்தான் திரையுலகில் இப்போது நடிக்க வேண்டிய தேவை குறைந்து உடம்பைக் குலுக்குவதற்கும் குதிப்பதற்குத் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.மிருகவ்கள் சிரிப்பதில்லை. மனிதன் மட்டுமே சிரிக்கத்தெரிந்தவன். தொல்காப்பியர் எட்டுச் சுவைகளில் மேலானது நகைச்சுவை என்பார். வாய்விட்டுச் சிரித்தால்நோய்விட்டுப்போகும் என்பார்கள் மருத்துவர்கள். இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர்.அக்காலம் முதல் இக்காலம் வரை அரசர்கள், அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள், பாமரமக்கள்
எல்லாருமே சிரிப்பால்தான் கவலையை மறந்து வாழ்கிறார்கள்.
_ பதிப்பகத்தார்.