ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் பகுப்பிற்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பத்துப் பாடல்களில் பயின்றுள்ள அத்திணைக்கு உரிய உரிப்பொருளோ, கருப்பொருளோ, கூற்று உரைப்போரோ, கேட்போரோ பகுப்பிற்குப் பெயராக அமைந்திருக்கின்றது.