சுதாகரிக்கு தம்பி கதிர்காமனை அழைத்துக் கொண்டு தன் பிறந்த மண்ணான
இலங்கையை விட்டு இந்தியாவுக்கு வர விருப்பமே இல்லை.ஆனால் சூழ்நிலை
மட்டுமில்லாமல் தம்பியின் பாதுகாப்பும் உந்த வேண்டாவெறுப்பாய் தான் கிளம்பி
வந்தாள். பதினைந்து ஆண்டுகளாகப் பார்க்காத தந்தையுடன் தான் வசிக்க
வேண்டும் ,அதுவும் ஒரு சிற்றன்னையுடன் என்றால் யாருக்குப் பிடிக்கும்.
இவ்வளவு துன்பங்களுக்கு நடுவில் இந்த தீபன் வேறு வந்துப் பேசி பேசி தொல்லைக் கொடுக்கிறானே !