ஆண்களும், ஆண்களைவிட அதிகமாகப் பெண்களும், பெண்களைவிட அதிகமாகக் குழந்தைகளும் இந்த நாவலில் வருகிறார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்குமான உறவு, பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு, ஆண்களுக்கும் குழந்தைகளுக்குமான உறவு, எல்லாக் குடும்பத்தினர்களும் பிற குடும்பத்தினர்களிடம் கொண்டிருக்கும் உறவு, உதிரியானவருகளிடமும் குடும்பங்கள் கொண்டிருக்கும் உறவு, வளர்ப்பு மிருகங்கள்மீது கொண்டிருக்கும் உறவுகள், கோயிலுடன், மழையுடன், வெயிலுடன், மண்ணுடன், வெயிலுடன், மண்ணுடன், தாவரங்களுடன் கொண்டிருக்கும் உறவுகள் எல்லாவற்றையும் விசாரிக்கும் போக்கு இந்நாவலை ஆட்கொண்டிருக்கிறது.