ஒரு புகைப்படக் கலைஞனால் மட்டுமே 'இரவுக்குச் சற்று முன்பு இறங்கிக்கொண்டிருக்கும் வானத்தின்' தனித்துவத்தை அவதானிக்க முடியும். தனது புகைப்படங்களைச் சட்டகங்களைத் தாண்டிய பயணிக்க வைக்கும் இளவேனில், சில கவிதைகளில் பிம்பங்களைச் சொற்களுக்குள் உறைய வைத்திருக்கிறார். புகைப்படக் கலைஞனாக அவர் அடைந்துள்ள வெற்றியைக் கவிஞனாகப் பெற வேண்டுமெனில் சொற்களின் சூட்சுமங்களை இன்னும் ஆழமாகக் கண்டறிய வேண்டும். அது அவருக்குச் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தத் தொகுப்பு.