நவீன தமிழ்க் கவிதையில் வினோதினியின் கவிதைக் குரல் ஒரு புதுக் குரல். போரின் வெம்மையும் காதலின் நெருப்பும், துயரத்தின் படர் தாமரையும் சூழ்ந்து கிடக்கிற ஒரு நிலக் காட்சியின் அற்புதமான, ஆனால் வலியைக் களப்புகிற குரல், மொழியின் வனப்பும் தொனியின் சிறப்பும் ஆசையும் நிராசையும் பிரிவறக் கலக்கும் ஒரு நூதனமான வெளியும் என இவரது கவிதைகள் நமது அனுபவப் பரப்பை அகலப்படுத்துகின்றன. பெயரில் மட்டுமல்ல -இவரது கவிதைகளிலும் இருக்கிறது வினோதம்.