'சமகால வரலாறு' என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத் துறை. மேலைப் பண்பாடுகளிலும் கூடச் 'சமகால வரலாறு' அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் நாடகமும் எழுதி நன்கறியப்பட தேவிபாரதி, இரண்டு அரசியல் நிகழ்வுகளைத் தம் வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துப் பதிவுசெய்துள்ளார். ஒன்று நெருக்கடிநிலைக் காலகட்டம். மற்றொன்று 1984 தேர்தல். சமகால வரலாற்றுக்கும் சுயசரிதைக்கும் இடைப்பட்ட ஒரு வெளியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார் தேவிபாரதி.