நம் உலகம் பற்றிய இலக்கணங்களைக் கணக்கில் கொள்ளாமல், அவற்றினால் கட்டுப்படாமல், முழுச் சுதந்திரத்துடன் தன் பிரத்தியேகமான உலகத்தையும் அந்த உலகின் விதிகளையும் சிருஷ்டித்துக்கொள்ளும் குழந்தையின் மனத்தின் அற்புதம் இக்கவிதைகளில் மிகுந்த ஆழத்தோடு வெளியாகியிருக்கிறது. 'சிருஷ்டி', 'குழந்தைகளைத் தண்டித்தல்', 'அப்போதிருந்து' போன்ற கவிதைகள் இதற்கு எடுத்துக்காட்டு.