இரண்டு எருதுகள் பூட்டி வண்டி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தது. வீட்டிலுள்ள முக்கியமான சாமானகளெல்லாம் ஏற்பட்டுவிட்டன. மாசு மருவில்லாத இரண்டு எலுமிச்சை பழங்கள் சக்கரங்களின் அடியில் வைக்கப்பட்டிருந்தன.
துடிப்பாக கால் மாற்றிக் கொண்டிருந்த எருதுகளின் முகத்தைத் தடவி நுகத்தடியைப் பிடித்தவாறு வண்டிக்காரன் அதனோடு பேசிக் கொண்டிருந்தான். காலில் ஒற்றிய மணலை லேசாகத் தேய்த்து உதறியவாறே வீட்டுக்குள்ளிலிருந்து பார்வதிதேவி வெளியே வந்து ரேழியில் நின்றாள்.