இக்கதைகள் மரபார்ந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்துகின்றன. அரசியலையும் துரோகத்தையும் மீறப்படும் காமத்தையும் எளிய உயிர்களின் மீதான அன்பையும் பற்றிப் பேசுவதோடு மரணத்தைத் தத்துவார்த்தமாக அணுக முயற்சிக்கின்றன.
இதிலுள்ள பதினொரு கதைகளும் ஒரே கருவை மையமாகக் கொண்டு நுண்கதை, குறுங்கதை மற்றும் சிறுகதை ஆகிய மூன்று வடிவங்களில் எழுதப்பட்டுள்ளன. இத்தொகுப்பு புனைவிலக்கியத்தில் இதுவரை இல்லாத புதிய வடிவத்தால் ஆனது.