காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நாவல்களில் ஒன்றான Of Love And Other Demons எனக்கு மிகப் பிடித்தமானது. அதன் தாக்கத்தால் உருவான காதலும் ஏனைய பூதங்களும் என்ற வாக்கியம் கடந்த சில வருடங்களாக தனித்த மந்திரம்போல மனதிற்குள் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒருவகையில் வாழ்க்கையைக் குறித்த சுருக்கச் சித்திரமாக இவ்வாக்கியம் இருக்கிறது. ஆண் பெண் உறவிலிருக்கும் இருட்டையும் வெளிச்சத்தையும் பேச முனையும் இக்கதைகளின் மனிதர்கள் பலர் நிலவுடமை சமூக மதிப்பீடுகளுக்குள் சிக்குண்டு அதன் நிர்ப்பந்தங்களிடம் சரணடைகிறவர்களாக இருக்கிறார்கள். - குணா கந்தசாமி