மலைவாழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உரத்துப்பேசியும் எழுதியும் வருகிற சோளகர் தொட்டி நாவலாசிரியரின் சிறுகதைத் தொகுப்பு இந்நூல். ஈழத்திலிருந்து அகதிகளாகத் தமிழகம் திரும்பியவர்கள் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் எதிர்கொண்ட அலைக்கழிப்பும் அவலமும் ஒன்றிரண்டு கதைகளாகியுள்ளன. அதிகாரத்திற்கெதிராக பேசச் சக்தியற்று நடைபிணமாய் உலவும் மலைகிராம மக்களின் துயரமிகு வாழ்க்கைப்பாடுகள் சில கதைகளில் கண்ணீராய் பதிவாகியுள்ளது. மொத்தத்தில் பிரிவு, வலி, தனிமை, வன்மம், துக்கம் என்பதாக வாழ்வின் எதிர்த்திசை நோக்கியே பயணிக்கின்றனர்.