எனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கை பயணங்களால் ஆனது. பயணங்கள் நிறைய அனுபவங்களை நினைவுகளை உணர்வுகளை மனிதர்களைத் தருபவை. எனக்கும் அப்படித்தான். கரியோடனுக்குப் பிறகான ஓராண்டில் எழுதப்பட்ட கதைகளே இந்தத் தொகுப்பு. அத்தனைக் கதைகளையும் பயணங்களே தந்தன. எனது பயணங்களும் காலத்தின் பயணமும் அடையாளம் காட்டிய மண்ணையும் மக்களையும் எழுத்தின் வழியே நினைவுப்படங்களாக்கி இருக்கிறேன். அந்தப் பயணங்கள் தந்தவைகளில் சில துளிகளே இந்தக் கதைகள்… பயணங்களை விட அழகான வகுப்பறைகள் உலகில் எங்கே இருக்கின்றன?