ஈழப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் எழுதப்பட்ட ஆறு கதைகளைக் கொண்ட இத் தொகுப்பின் ஆதாரமாக அமைந்திருப்பவை போரும் புலம்பெயர்வும். இந்த வகைமையில் பல நூறு கதைகள் வெளிவந்திருப்பினும் நட்சத்திரனின் கதையுலகம், சொல்முறையி லும் புனைவுக் கட்டமைப்பிலும் தனித்துவம் கொண்டது. இக்கதைகள் லட்சியங்களின் மூலம் கட்டமைக்கப்படும் வரலாற்றையும் பிம்பங்களையும் கலைக்க முயற்சிப்பவை; கூடவே மாற்று வரலாற்றையும் கட்டமைப்பவை. சமகால அரசியலை எளிய மொழியில் பகடியாகவும் எள்ளலுடனும் சித்தரிப்பவை.