இந்தியாவின் இணையில்லா முன்னாள் குடியரசுத் தலைவர் தனித்தன்மை வாய்ந்த அறிவியல் வித்தகர். பாரதரத்னா ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் உயர்ந்த எண்ணங்களை ஊட்டும் சிந்தனைகளை '' Inspiring Thoughts " என்ற ஆங்கில நூலினை தமிழ் உலகம் பயனுறும் பொருட்டு 'எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்' என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலின் கூறப்பட்டுள்ள அவர் கருத்துகள் உங்களை திரும்ப திரும்ப சிந்திக்க தூண்டும். சமுதாயத்தில் உள்ள அனைவரின் பங்கையும் திரையிட்டு காட்டும் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சி அடையச்செய்யும் குழந்தைகள், இளைஞர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண குடிமகன், தாய், தந்தையர், ஆசிரியர் என அனைவரின் கடமைகளை வெளிச்சமிட்டு காட்டும் சுபர் விளக்கு. அனைவரும் படித்து பயன்பட வேண்டிய மானுடத்தின் வழிகாட்டி.