நாம் பிறந்து, வளர்ந்து, உண்டு உறவாடி, உறங்கி மகிழும் இந்த பூமித்தாயைப் பற்றி சில கேள்விகள்... பூமித்தாய் எப்போது இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றினாள்? தொடக்கத்தில் எவ்வாறு இருந்தாள்? நாம் பருகும் நீரும் சுவாசிக்கும் பிராணவாயுவும்,உண்ணும் உணவும் பூமித்தாய் நமக்காக எவ்வாறு சமைத்துக் கொடுத்தாள்? பூமியைத் தவிர வேறு எங்காவது ஏதாவது உயிரினம் உள்ளதா இல்லையா?