உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புக்கள் பலப்பல. அவைகளுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது.நூல்கள் பல திறம். பல திறத்துள் விராவியும், தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்துவம் நிற்பதன்றோ? 'ஊரும் பேரும்' என்னுந் தலைப்பு விழுமியது. அஃது ஆழ்ந்த பொருண்மை யுடையுது; சுரங்கம் போன்றது.