பண்டைத் தமிழ் இலக்கியங்களின் புதைத்து கிடக்கும் செல்வத்தின் பெருமை இன்னதென்று இன்னும் தமிழ் மக்கள் சரியாகப் உணரவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை, மனப்பான்மை, சரித்திரம் இவைகளை நாம் அறிவதற்குப் பண்டைத் தமிழிலக்கயங்களே இன்றியமையான கருவூலங்களாய் இருக்கின்றன.